கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டு வரை, ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ1,938 கோடியை வருவாயாக ரயில்வே துறை ஈட்டியுள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டில் மட்டும் ரயில்களில் 1.10 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து மாட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.561.73 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும்.
Source: https://m.dailyhunt.in/news
Comments