தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் பொதுப்போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்லவும், பிறமாநிலங்கள் செல்ல இருக்கும் இ-பாஸ் நடைமுறை இனி கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Comments