top of page

#BREAKING NEWS..!! தமிழகத்தில் பள்ளி - கல்லூரிகளை திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.!!


கொரோனா வைரஸ் குறைந்த பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதால், மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சமீபத்தில், கொரோனா பாதிப்பு தன்மை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியவை, கொரோனா பரவல் குறைந்த பிறகே, பள்ளி - கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


1 view0 comments

コメント


bottom of page