top of page

N-95 முகக்கவசம்: வால்வ் உள்ள கொரோனா வைரஸ் மாஸ்க் குறித்து இந்திய அரசு புதிய எச்சரிக்கை


N-95 முகக்கவசம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் N-95 முகக்கவசங்கள்தான் மற்ற முகக்கவசங்களை விட பாதுகாப்பானது என பேசப்பட்டது. இது தொடர்பாக ஊடக செய்திகளும் வெளிவந்தன.

இந்தநிலையில், "வால்வ் வைத்து பயன்படுத்தப்படும் N-95 மாஸ்க்குகள், கொரோனா தொற்றுப் பரவல் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துகிறது." என ராஜீன் கார்க் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.காற்று வெளியே வந்து செல்ல வசதியாக முகக்கவசத்தில் அமைக்கப்படும் வால்வுகள் பிரத்தியேகமாக மருத்துவத் துறையினருக்காக தயாரிக்கப்படுவை என்றும், அந்த முகக்கவசங்களை பொதுமக்கள் தவறான முறைகளில் பயன்படுத்துவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



0 views0 comments

Komentáre


bottom of page