மற்ற இடங்களுக்கு இ-பாஸ் வழங்குவது போல் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையவே இ-பாஸ் பெறுவதில் கடுமை காட்டப்பட்டது. இதன் காரணமாக நீலகிரியில் சமீபகாலமாகக் கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்தச் சூழ்நிலையில், ''இப்போது விண்ணப்பிப்பவர்களுக்கு எல்லாம் இ-பாஸ் கிடைத்துவிடுவதால் வசதி வாய்ப்புள்ள பலரும் இதைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் நீலகிரிக்கு வருகின்றனர். அவர்கள் இங்கே இருக்கும் காட்டேஜ்களில் அறை எடுத்துத் தங்கிவிடுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்று நீலகிரி மாவட்ட மக்கள் புலம்புகிறார்கள்.
Source: https://m.dailyhunt.in/news
Comments