எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.12 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 84.64காசுகளாகவும், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.78.86 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Source: https://m.dailyhunt.in/news
Comments