எஸ்பிபி க்கு சென்ற வாரம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் எக்மோ சிகிச்சையும் ,வெண்டிலேட்டர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது .அவரின் மகன் சரண் ,எஸ்பிபி க்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ,அவரின் நுரையீரல் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ,அவர் சுயநினைவோடு இருப்பதாகவும் ,தங்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ,இருந்தாலும் அவருக்கு எக்மோ சிகிச்சையும் ,வெண்டிலேட்டர் சிகிச்சையும் தொடர்ந்து தரப்படுவதாகவும் ,நோய் தொற்று ஏற்படாமல் அவருக்கு அதி நவீன சிகிச்சைகள் தரப்படுவதாகவும் ,அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் .
Source: https://m.dailyhunt.in/news
Comments