top of page

கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா? -வைரஸின் பரிமாண வளர்ச்சி


70 வயதைக் கடந்த ஆண் ஒருவர் மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப கட்ட உதாரணமாக இருக்கும் நோயாளி. அதிர்ச்சிகரமான, கவலைதரக் கூடிய இந்த விஷயம் அவர் மூலமாகத்தான் மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது.

அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பரிசோதனையில் கண்டறியப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் டோக்கியோ மருத்துவமனையில் தனிமை வார்டில் அவர் வைக்கப்பட்டார். ஜப்பானின் செய்தி ஒளிபரப்பு நிறுவனம் என்.எச்.கே. வெளியிட்ட தகவலின்படி, அவர் குணமடைந்து, வீடு திரும்பி இயல்பு வாழ்வைத் தொடங்கிவிட்டார். பொதுப் போக்குவரத்து வசதிகளையும்கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். சில வாரங்கள் கழித்து, அவர் மறுபடி நோயுற்றார், அவருக்குக் காய்ச்சல் வந்தது.

அவர் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். இந்த வைரஸ் பாதிப்பு அவருக்கு இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது அவருக்கும், மருத்துவர்களுக்கும் அதிர்ச்சி தந்தது.

ஜப்பானில் இந்த நிலையில் இருப்பது அவர் மட்டுமல்ல. கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கிய நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்றாலும், கணிசமான எண்ணிக்கையாக உள்ளது.

1 view0 comments

Comments


bottom of page