4 மாதங்களுக்குப் பின்பு பிரசித்தி பெற்ற சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளையில் மாஸ்க் அணியாமல் வந்தால் அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது.இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Source: https://m.dailyhunt.in/news
Comments