அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வரிடம் மனு தந்து, முழு ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்தினர்.புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வந்தார். காரில் வந்த அவரைப் போலீஸார் தடுத்தனர். காரிலிருந்து இறங்கி நுழைவாயிலில் தரையில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.போராட்டம் தொடர்பாக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் கூறுகையில், "கரோனா தொற்று ஆரம்பக் காலத்தில் கட்டுப்பாட்டு மண்டலமாக எனது தொகுதி அறிவிக்கப்பட்து. இதனால் தொகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். அரசு அறிவித்தபடி காய்கறி, மளிகைகூட வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் உள்ளூர் ஊரடங்கு 32 பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும்.
எனவே உள்ளூர் ஊரடங்கை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கி, பின் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தித் தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
Source: https://m.dailyhunt.in/news
Comments