நீலகிரி மாவட்டம், குன்னூரில் சாலை ஓரங்களில் இடையூறாக இருந்த செடிகள் அகற்றப்பட்டன. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன், உத்தரவின் பேரில், குன்னூர் போக்குவரத்து காவல் துறையினர், சாலை ஒரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.குன்னூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முரளி, துணை ஆய்வாளர்கள் ராமன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் காவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
Source: https://m.dailyhunt.in/news
Komentáře