முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூளையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
Source: https://m.dailyhunt.in/news
Comments