நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே இருக்கும் வனப்பகுதியில் மலைவாழ் பெண் ஒருவர், மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணை கவுரி புலி தாக்கியிருக்கிறது. அதனால் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: https://m.dailyhunt.in/news
Comments