top of page

மதுரையில் நகராட்சி பெயரில் போலியாக பில் தயாரித்து கடைகளில் பணம் வசூலிப்பதாக புகார்


மேலூர் நகராட்சியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ள அந்த ரசீதில் திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின்படி தண்டம் வசூலிப்பதற்கான ரசீது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழே அபராதத் தொகையில் 200 ரூபாய் என பூர்த்தி செய்து தரும் அவர்கள், அதற்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் எதையும் பூர்த்தி செய்வதில்லை.

சம்பந்தப்பட்ட அந்த ரசீதுகளில் சிலவற்றில் ஆணையாளரின் சீல் இருப்பது போன்றும், பலவற்றில் சீல் இல்லாமலும் உள்ளது. பட்டவர்த்தனமாக போலி பில் எனத் தெரிந்தும், நகராட்சி அதிகாரிகள் என வருவதால் வேறு நடவடிக்கைக்கு பயந்து கேட்கும் 200 ரூபாயைக் கொடுத்து கடைக்காரர்கள் சமாளித்து வருகின்றனர்.

1 view0 comments

Comments


bottom of page