top of page

யூனிஃபார்மோட போலீஸ் 'அப்படி'யிருக்கும்போது இருக்கும்போது படமெடுத்த வாலிபர்-துப்பாக்கிக்கு பலி..


டெல்லியில் கடந்த வியாழக்கிழமையன்று 47 வயதான சுரேந்தர் என்ற ஒரு தலைமை போலீஸ்காரர்,இரவு டூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது அவருக்கு சரக்கடிக்கும் எண்ணம் திடீரென தோன்றவே ,போகும்வழியிலிருந்த ஒரு ஒயின் ஷாப்புக்குள் சரக்கடிக்க போனார் .அப்போது அவர் அங்கு சரக்கடித்துக்கொண்டிரும்போது, அங்கு வந்த கெஹ்லாவத் என்பவரும் சரக்கடித்தார்.

இருவரும் சரக்கடிக்கும்போது அந்த வாலிபர் சீருடையில் தண்ணியடிக்கும் அந்த போலீசை படமெடுத்தார்.

இதனால் கடுப்பான போலீஸ் குடிபோதையில் அவரிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஒரு சுட்டார் .அவரின் துப்பாக்கி குண்டு அவரின் நெஞ்சில் பாய்ந்ததில் அந்த வாலிபர் அங்கேயே மயங்கி விழுந்தார் .பிறகு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார் . இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த போலீஸ் உயர்அதிகாரிகள் , துப்பாக்கியால் சுட்ட அந்த போலீஸ் சுரேந்தரின் துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்தனர்.

2 views0 comments

Comments


bottom of page