top of page

ராமநாதபுரத்தில் 31 பேருக்கு கரோனா உறுதி


கடந்த 23 ஆம் தேதி வரையில் 4,385 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவா்கள் அனைவருக்கும் சிகிச்சை அளித்த நிலையில், 97 போ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்ட அளவில் தற்போது கிராமப்புறங்களில் பெண்களுக்கு கரோனா பாதிப்பு பரவல் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் குறிப்பிட்ட கிராமங்களில் தினமும் குறைந்தது 10 பெண்களுக்காவது கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடுவக்கோட்டை, குன்றத்தூா், ராமநாதபுரம் நகா் பகுதிகளில் 500-க்கு மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 27 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. 27 பேரில் பெண்கள் அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

2 views0 comments

Comments


bottom of page