பிறகு மறு நாள் இரவு அவரின் குடும்பத்தை சேர்ந்த அவரின் மாமா அசோக் என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் சில கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார் .இந்த சம்பவத்தில் அவரின் உறவினர்கள் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர் .இதனால் ரெய்னா தனக்கு கிரிக்கெட் இரண்டாம் பட்சம்தான் குடும்பம்தான் முதலில் வேண்டுமென்று அங்கிருந்து கிளம்பி நேராக பஞ்சாபுக்கு சென்றார் ,பிறகு அங்குள்ள போலீஸ் அதிகாரிகளை சந்தித்து இந்த கொலை ,கொள்ளை சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டுகோள் விடுத்தார் .இதனால் அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் அந்த கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .இப்போது சுரேஷ் ரெய்னா அங்கு தமது உறவினர்களோடு இருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார் .விரைவில் அவரின் உறவினர்களை கொன்ற கொள்ளையர்கள் பிடி படுவார்களால் என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள் .
Source: https://m.dailyhunt.in/news
Comments