1982ல், அர்ஜென்டினாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று, இந்த கப்பல் பாராட்டுகளைப் பெற்றது.இதையடுத்து, 1987ல், 475 கோடி ரூபாய்க்கு, இந்த போர்க்கப்பலை வாங்கிய இந்திய அரசு, அதே ஆண்டு, தன் கடற்படையில் இணைத்துக்கொண்டது. அதற்கு, ஐ.என்.எஸ்., விராட் என பெயரும் சூட்டப்பட்டது.இதையடுத்து, 30 ஆண்டுகளாக சேவையில் இருந்த இந்த கப்பல், 2017ல், கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. பின், இந்தக் கப்பலை அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், கடந்த ஆண்டு, ஐ.என்.எஸ்., விராட்டை உடைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இதையடுத்து, கப்பலை உடைப்பதற்கு, 'மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட்' ஏலம் விட்டது. இந்த ஏலத்தை, 38.54 கோடி ரூபாய்க்கு, ஸ்ரீ ராம் குழுமம் எடுத்தது.இந்நிலையில், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளத்தில், அந்த கப்பலை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Source: https://m.dailyhunt.in/news
Commenti